Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 17 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, நந்திக்கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முல்லைத்தீவு பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்புடன் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், புதன்கிழமை (17) தெரிவித்தார்.
முல்லைத்தீவு நந்திக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த சட்டவிரோத மீன்பிடியாளர்களின் தலையீட்டுக்கு முடிவுகட்டும் விஷேட கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை (15) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
நந்திக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
இதன்போதே, சட்டவிரோத மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவர்களை ஒன்றிணைத்த குழுவொன்று அமைக்கப்பட்டு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago