Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 17 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
மக்கள் சக்தி ஒன்றிணைவதன் மூலமாகவே மதுவை நாம் ஒழிக்க முடியும் என வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன், இன்று (17) தெரிவித்தார்.
மதுவற்ற வவுனியா வடக்கு விசேட நிகழ்ச்சி திட்டத்தினை வவுனியா ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சித்திட்டம், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் திவிநெகும அபவிருத்தி திணைக்களத்தின் வவுனியா வடக்கு பிரதேச செலயகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,
இன்றைய வறுமைக்கு மது என்பது முக்கிய காரணியாக காணப்படுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சட்டவிரோத மதுப்பாவனை தடுக்கப்பட்டுள்ள போதிலும் மதுப் பாவனையாளர்கள் கணிசமாக உள்ளனர்.
எமது பிரதேசத்தை வறுமையில் இருந்து மீட்பதற்கு மதுவை ஒழிப்பது முக்கிய சாவலாகவுள்ளது.
அரச அதிகாரிகள் மட்டும் செயற்படுவதன் மூலம் அதனை சாதிக்க முடியாது, மக்கள் சக்தி ஒன்றிணைவதன் மூலமாகவே மதுவை நாம் ஒழிக்க முடியும்.
எனவே மனச்சாட்சியுள்ளவர்களாக மானசீகமாக மக்கள் மதுவை ஒழிக்க ஒன்றுபடவேண்டும்.
அதன் மூலம், வவுனியா வடக்கு பிரதேசத்தில் இருந்து நாம் முதன் முதலாக மது அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம். அதனூடாக ஏனைய பிரதேசங்களும் மது அற்ற பிரதேசங்களாக்கி அழகிய இலங்கைத்தீவு மது அற்ற நாடாக சர்வதேசத்தின் முன் பரிணமிக்க வேண்டும்.
இன்று மதுவினால் குடும்பங்களின் பாசத்தை பலர் இழக்கின்றனர். பிள்ளைகளின் கல்வயை பல பெற்றோர் தெலைக்கின்றனர்.
எவ்வாறு எமது பிரதேச செயலகம் ஏனைய திணக்களங்களுடன் இணைந்து செயற்படுவதில் இலங்கையில் முன்னணியில் திகழ்கின்றதோ அதேபோல் மது அற்ற பிரதேச செயலகமாகவும் இன்னும் நில காலத்தில் மிளிரும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என தெரிவித்தார்.
இதன்போது, மது மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் பயன்படுத்தாதோர் மற்றும் பயன்படுத்தி அதில் இருந்து விடுதலை பெற்றோரை ஒன்றிணைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயந்தரூபன் தலைமையில் பிரதேச மட்ட மது ஒழிப்புக்காக குழு நியமிக்கப்பட்டது.
அத்துடன் கிராம மட்டங்களிலும் மது ஒழிப்புக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற மேற்படி குழுவினர் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவர்கள் முன்னிலையில் மதுவை ஒழிப்பதற்கான சத்தியப்பிரமாணத்தையும் செய்திருந்தனர்.
இந் நிகழ்வுகளில், வவுனியா தொற்றா நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago