2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'போதைப்பொருளை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்'

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸார் வியாழக்கிழமை (18) தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பாக கிராம புறங்களின் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை மற்றும் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை என்பன அதிகரித்துள்ளன.

இது தொடர்பாக அதிகம் அறிந்து வைத்திருப்பவர்கள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களே ஆகும்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் தகவல்களை பொதுமக்கள் தந்துதவினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்க உதவியாகவிருக்கும் என பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .