Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 19 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சமகாலத்தில் வடமாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தரக்கோரி வடமாகாண மீனவர்கள் அனைவரும் ஒன்றினைந்து எதிர்வரும் மாதம் யாழ்ப்பாணத்தில் பாரியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவரும் மன்னார் மாவட்ட மீனவ சங்க சமாச தலைவருமான என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடர்ச்சியாக இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடமாகாண மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும்; எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது மௌனம் காத்து வருகின்றனர்.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வாரம் மன்னாரில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் மாதம் வடமாகாண ரீதியில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை ஒன்றினைத்து பாரியளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானித்துள்ளோம்.
குறித்த போராட்டம், யாழ். அரச அலுவலகத்துக்கு முன்னால் அல்லது யாழ். இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னால் நடத்தலாம் என தீர்மானித்துள்ளோம்.
வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் நிர்ணயிக்கும் திகதியில் பாரியளவில் மக்களையும் மீனவர்களையும் ஒன்றினைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இலங்கையிலுள்ள தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை முழுமையாக கைவிட வேண்டும் என்றால் ஒட்டு மொத்த மீனவர்களின் ஒருமித்த கோரிக்கையான இந்திய மீனவர்களின் வருகையை தடை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago