Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 19 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 தமிழக மீனவர்களை, எதிர்வரும் 3ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டார்.
தமிழக மீனவர்கள் 14பேர் தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 2ஆம் திகதி மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த 14 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குறித்த 14 தமிழக மீனவர்களும் மீண்டும் இன்று (19) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்களை மீண்டும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago