2025 ஜூன் 28, சனிக்கிழமை

புதுக்குளம் மகா வித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 23 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் இன்று (23) திறந்து வைத்தார்.

கல்வி அமைச்சின் 1,000 பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிரு;த புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடமும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இசுறு பாடசாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலை கட்டிடத்தொகுதியையும் அமைச்சர் திறந்து வைத்திருந்தார்.

பாடசாலை அதிபர் த. அமிர்தலிங்கம் தலைமயில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .