2025 ஜூன் 28, சனிக்கிழமை

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்: இராதா

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ்ச் சமூகம் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டிய காலம் உருவாகியுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியா, புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 'வவுனியா எல்லோருக்கும் அடைக்கலம் கொடுக்கும் பூமியாக இருக்கின்றது. 2009ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து வந்த மக்களுக்கு வவுனியாவே மத்தியாக அமைந்தது' என்றார்.

'அதேபோல், மலையகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டபோதெல்லாம் அடைக்கலம் கொடுத்தவர்களும் வவுனியா மக்களே என்பதனையும் மறந்து விட முடியாது. அதனால் இன்றும் வவுனியாவில் மலையக மக்கள் அதிகளவில் வாழ்கின்றார்கள்.

ஆகவே, தமிழ்ச் சமூகம் எங்கு வாழ்ந்தாலும் பிரதேசவாதம் இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டிய காலத்தை இன்று எதிர்கொண்டுள்ளோம். தமிழர்கள் பிரிந்து வாழ்வதனால் எந்விதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை.

அரசாங்கத்தால் கொண்டுவரப்போகும் 20ஆவது திருத்தச்சட்டம் என்பது இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள 7 நாடாளுமன்ற உறுப்பினர் தொகை 4ஆக மாறும் நிலை உருவாகும். அதேபோல் வன்னி தொகுதியிலும், தொகுதிகள் சுறுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுறுக்கப்படுவார்கள்.

ஆகவே, எங்களுடைய பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இருந்து என்ன பயன். எனவே நாம் இது தொடர்பில் சிந்தித்து பார்க்கவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி சொல்கின்றது 225 என்று. மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார் 237 என்று ஆகவே எதை நம்பி சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆகவே தான், சிறுபான்மை கட்சிகள் இணைந்து இரட்டை வாக்கை உருவாக்கி தருமாறு கோரியிருக்கின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆகவே அவர்களின் கருத்தை ஆராய்ந்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படவேண்டும்' என இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .