Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 01 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த மின்சார இணைப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜமால்தீன் ரிசாம், செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாவட்டங்களில்; காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அமைப்பாளர்களிடம் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது, வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கடந்த காலங்களில் பல குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் எமது மாவட்டத்தில் மின்சாரம் பெறாத குடும்பங்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றர்.
எனவே, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தேன்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இதன்போது பிரதமர் உறுதியளித்திருக்கிறார். விரைவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
53 minute ago