Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 02 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தமிழ் மக்களை தொடர்ந்தும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'புதுக்குடியிருப்பு, கேப்பாப்புலவு ஆகிய பகுதிகளில்; இராணுவம் ஆக்கிரமித்திருக்கின்ற நிலங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவிதமான மாற்றங்களும் தெரியவில்லை. அதில் முடிவு ஒன்;றும் எடுக்கப்படவில்லை. எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்ற சூழல் காணப்படுகின்றது' என்றார்.
'கடந்தகால அரசாங்கம் எங்களை அழுத்தி அச்சுறுத்தி எங்களை அழிக்க நினைத்தது. மாற்றம் ஒன்று ஏற்பட்டதன் பின்னர் நாங்கள் இவற்றை வென்றெடுக்கலாம் என்று நினைத்தோம், நினைத்து வருகின்றோம்' என்று அவர் மேலம் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
1 hours ago