2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இரண்டாவது நாளாகவும் கதவை பூட்டி மாணவர்கள் பகிஸ்கரிப்பு

Sudharshini   / 2015 ஜூலை 04 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வந்த கா.பங்கையச்செல்வனை வடமாகாண கல்வி அமைச்சு இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (03) நுழைவாயிலை பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமது பாடசாலையில் கடமையாற்றிய அதிபரின் இடமாற்றத்தினை மீள் பரிசீலனை செய்ய கோரியும், அவரது மாற்றத்தின்போது அவருக்கு தகுதியான பாடசாலை ஒன்றினை வழங்க வேண்டும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதி மறுத்த பாடசாலை மாணவர்கள் பின்னர் 4 அதிகாரிகளை மாத்திரம் உள்ளே அனுமதித்திருந்தனர். வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அது பயனளிக்கவில்லை.

இது குறித்து அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமனம் தொடர்பில் ஏற்கனவே தங்களால் முடிந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்த அடிப்படையிலேயே புதிய அதிபர் நியமிக்கப்பட்டதாக கூறினார். மாணவர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.

குறித்த பாடசாலையில் கடமையாற்றிய அதிபரை கனகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக தற்காலிகமாக கடமையாற்ற பணித்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் அதிபர் இடமாற்றங்கள் இடம்பெறும் போது தகுதியான பாடசாலை அவருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .