2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இழுபறியான நிலையில் அமைக்கப்படும் வீதி

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சீமெந்திலான வீதிக்கு கிரவல் அணை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் 500 வரையான குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றன. 

அக்கராயன் வன்னேரிக்குளம் வீதியில் ஆனைவிழுந்தான் சந்தியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு மீள்குடியேற்ற நாளிலிருந்து சீமெந்திலான வீதி அமைக்கப்பட்டு வந்தது.

ஒப்பந்தகாரர்கள் நீண்டகாலமாக இவ்வீதியினை அமைப்பதில் இழுபறியினை மேற்கொண்டு ஒருவாறு வீதியமைக்கப்பட்ட நிலையில் தற்போது கிரவல் மண் அணைக்கான கிரவல், வீதியில் குவிக்கப்பட்டு வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .