2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

போக்குவரத்து நெருக்கடியில் வன்னேரிக்குளம் மாணவர்கள்

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மேற்கின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள இக்கிராமம் 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இக்கிராமத்தில் 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்துக்கு போக்குவரத்து பெரும் நெருக்கடியாகவுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வன்னேரிக்குளம் மருத்துவமனை வழியாக முழங்காவில் வரை பஸ்கள் பயணிக்கின்றன. வன்னேரிக்குளம் மருத்துவமனையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள பாடசாலைக்கு பஸ்கள் பயணிப்பதில்லை.

இதன் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் நடந்தே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம் வரை பஸ் வழித்தடத்தை வழங்குமாறு வன்னேரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கமும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .