Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 06 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுக்கின்ற விவேகமான அரசியலை ஆதரிப்பதன் மூலமே சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் மற்றும் கிருஸ்ணபுரம் பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிச்சைக்காரன் தன்னிடமுள்ள இயலாமையை காட்டி பிச்சை எடுப்பது போன்றே சிலர் தமிழ் மக்களின் அவலத்தை வைத்து அரசியல் செய்து வாக்குகளாக பெற்று வருகின்றனர். மாறாக அந்த அவலத்தை தீர்த்து மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிகள் எடுப்பதில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று அரசியல் செய்திருந்தால் கடந்த ஐந்து வருடங்களில் எங்கள் மக்களின் வாழ்விலும் பிரதேசத்திலும் இந்தளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு அவசியம் என்பதை உணர்ந்த நாம் அதற்காக கடந்த ஐந்து வருடத்தை பயன்படுத்தியிருக்கின்றோம். இதனை மனசாட்சியுள்ள அனைவரும் மறுக்க மாட்டார்கள். மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் இந்த முன்னேற்றம் போதாது.
பல தேவைகளுடன் வாழும் எம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மக்களுக்கான குறப்பாக இளம் சமூகத்துக்கான நிரந்த தொழில் துறையை ஏற்படுத்த வேண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அதனை வெறுமனே பத்திரிகை அறிக்கைகள் மூலம் செய்துவிட முடியாது.
இங்கே ஒரு கூட்டம் மக்கள் மத்தியில் நெருக்கடிகளை ஏற்படுத்தி அதனை தங்களின் அரசியலாக்கி வருகின்றனர். இதனை மக்கள் நன்கு அறிந்து அவ்வாறானவர்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் இன்று எதனையும் தீர்மானிப்பதாக அமைக்கிறது எனவே, அவ்வாறான அரசியலை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டுமாயின் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago