2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகளை தடுப்பது நியாயமற்றது: கு.புஷ்பகுமார்

Menaka Mookandi   / 2015 ஜூலை 07 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்த குமார்

'நல்லாட்சி நடைபெறும் இக்காலகட்டத்தில், ஜனநாயகப் பாதையில் பயணிக்க விரும்பும் முன்னாள் போராளிகளை ஆதரிப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். தவிர அவர்களைத் தடுப்பது நியாயமற்றது' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.புஸ்பகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடமில்லை என கூறப்பட்ட செய்தி தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை (07) வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்;டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய புஷ்பகுமார், 'நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னரும் முன்னாள் போராளிகள் பலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள், இதற்கு சிறந்த உதாரணம்' என்றார்.

'அவ்வாறானவர்களின் கைது அல்லது தண்டனைகளுக்கு எதிராக குரல் கொடுக்க யாரும் இல்லை. ஜனநாயக வழியில் திரும்பும் அவர்களை ஆதரிப்பதற்கும் எவருமில்லை. அப்படியானால் அவர்களின் எதிர்காலம் என்ன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

தொழில் வாய்ப்புக்காக அவர்கள் செல்லும்போது, முன்னாள் போராளி எனும் பெயர் சூட்டப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். பொலிஸ் நிலையங்களுக்கு செல்லும் போதும் குற்றவாளிகள் போல் நடத்தப்படுகின்றனர். இன்னும் பலர் சிறையி வாடுகின்றனர். இவ்வாறு பல இன்னல்களை அவர்கள் எதிர்நோக்குவதால், அவர்களது குடும்பங்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகின்றன.

ஆகவே, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள முன்வருவதில் எவ்வித தவறும் இல்லை. ஆகவே, ஜனநாயக போராளிகள் கட்சியினரை வடக்கில் மட்டுமல்லாமல் கிழக்கிலும் போட்டியிட அனுமதித்து அவர்களது பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வழிசமைக்க வேண்டும்' என புஸ்பகுமார் மேலும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .