Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
George / 2015 ஜூலை 09 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை, இத்தாவில் ஆகிய பகுதிகளின் ஏ – 9 வீதியின் வடக்கு பக்கமாகவுள்ள காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, வியாழக்கிழமை (09) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பிலான மக்கள் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை(10) பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
ஏ – 9 வீதியின் வடக்குப் பக்கமாக வெடிபொருட்கள் முற்றாக அகற்றப்பட்ட 1.7 கிலோமீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட காணியே இவ்வாறு பொதுமக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவுள்ளதாக கூறினார்.
அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கூறினார். வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பின்னர் மிகுதிக் காணிகளிலும் மீள்குடியேற்றம் செய்யப்படும் என பிரதேச செயலாளர் கூறினார்.
5 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளும் மற்றும் தென்னந்தோப்புமே விடுவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
54 minute ago
1 hours ago