2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முப்பரிமாண நூலக கண்காட்சி

Sudharshini   / 2015 ஜூலை 09 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நூலக விழிப்புணர்வு நிறுவகம் ஏற்பாடு செய்த முப்பரிமாண நூலகக் கண்காட்சி மன்- அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் இன்று வியாழக்கிழமை (09) ஆரம்பமானது.

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பிரம்ம ஸ்ரீ மஹா தர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் குறித்த கண்காட்சி ஆரம்பமானது.

குறித்த கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், சிறப்பு விருந்தினராக மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு, கௌரவ விருந்தினராக நூலக விழிர்ப்புணர்வு நிறுவனத்தின் தலைவி அருளானந்தம் ஸ்ரீகந்த லட்சுமி, தமிழ்ச்சங்கத்தின் பிரதி நிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் இக்கண்காட்சி; ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று ஆரம்பமான இக்கண்காட்சி எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .