2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறிதரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரம்

George   / 2015 ஜூலை 10 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் சுவரொட்டியாக ஒட்டப்பட்டும் உள்ளன.

சிறிதரனின் மோசடிகளும் ஊழல்களும் எனத் தலைப்பிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் முன்னாள் போராளிகளை சிறிதரன் பிடித்துக் கொடுத்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து ஐ.நாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சூரியசிங் என்பவருடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டு, சுயநலமாக நடந்தனர் என அந்தத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் சுவரொட்டியாக ஒட்டப்பட்டுள்ளதுடன் முடிவில் அதிரடி உண்மைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .