2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Sudharshini   / 2015 ஜூலை 11 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தளம் மன்னாரில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (11) மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் சின்னக்கடை பகுதியில் ஒதுக்கப்பட்ட காணியில் குறித்த வாசஸ்தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் யுவஞ்ஜன விஜயதிலக்க தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் பினிதினிய, மன்னார் நீதிமன்ற நீதவான் அலெக்ஸ் ராஜா ஆசிர்வாதம், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், மன்னார், வவுனியா, யாழ்ப்பாண நீதிமன்ற அரச சட்டத்தரணிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .