2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

6 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் சாரதி காப்பாற்றப்பட்டார்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பேசாலையில் இருந்து கொழும்புக்கு மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த லொறி, ஆனமடுவ-நவகத்தேகம வீதியில் உஸ்வௌ பொத்திக்கட்டுவ வளைவில் உள்ள பாலத்தின் கீழே, செவ்வாய்க்கிழமை அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிக்கொண்ட லொறியின் சாரதி, மயக்கமுற்ற நிலையில் சாரதி ஆசனத்துக்குள்ளேயே சிக்கியிருந்துள்ளார்.

படுகாயமடைந்திருந்த சாரதியை, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஆறுமணி நேரத்துக்கு பின்னர் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

காயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியான சுப்பையாபத்மநாதன் என்பவரைக் காப்பாற்றுவதற்கு பெக்கோ இயந்திரம் மற்றும் பாரம் தூக்கி இயந்திரங்களும் வேல்டிங் உபகரணமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மீன் லொறியில், நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் இருந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .