2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

22 இந்திய மீனவர்கள் கைது

Super User   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

22 இந்திய மீனவர்களை தலை மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே நேற்று திங்கட்கிழமை கடற் படையினரினால் கைதுசெய்ப்பட்டு தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஐந்து படகுகளில் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த 22 மீனவர்களையும் கடற் படையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது குறித்த மீனவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தலை மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ள்னர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X