Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 31 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், 333 பேர் சிறுநீரக நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 296 பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்டச் சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேளைத்திட்டங்களின் அடிப்படையில், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில், 192 பேரும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 56 பேரும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், 42 பேரும் பளை பிரதேச செயலாளர் பிரிவில், 23 பேரும் என 333 பேர் சிறுநீரக நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக, மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago