Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 08 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து, இன்று (08) அதிகாலை 2.30 மணியளவில், ஒருதொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை, இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர், மன்னார் - பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து, சட்ட விரோதமாக நாட்டக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளையும் மீட்டனர்.
அத்துடன், வள்ளங்கள் - 3 மற்றும் பட்டா ரக வாகனம் - 1 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் உள்ளிட்ட பொருள்கள், மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago