2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’அம்பியூலன்ஸ் வராததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்’

Niroshini   / 2021 ஜூலை 15 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

ஐயன்கன்குளம் வைத்தியசாலைக்கு உரிய அம்பியூலன்ஸ் வைத்தியசாலைக்கு திரும்பி வராததன் காரணமாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 2019ஆம் ஆண்டு ஐயன்கன்குளம் வைத்தியசாலையில் இருந்து திருத்தத்துக்கென கொண்டு செல்லப்பட்ட ஐயன்கன்குளம் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் மீண்டும் ஐயன்கன்குளம் வைத்தியசாலைக்கு திரும்பி வரவில்லை எனவும் இதன் காரணமாக ஐயன்கன்குளம் வைத்தியசாலையினை நம்பியுள்ள பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வைத்திய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.

ஐயன்கன்குளம் வைத்தியசாலையில் இரவு வேளையில் வைத்தியர் பணியில் இருப்பதில்லை எனத் தெரிவித்த அவர், வைத்தியசாலையில் சேவையில் அம்பியூலன்ஸ் இருக்குமானால் 15 கிலோமீற்றரில் உள்ள மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்கள் இலகுவாகச் செல்ல முடியுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .