Freelancer / 2023 ஜனவரி 06 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - மன்னார் வீதி, இரண்டாம் கட்டைப்பகுதியிலுள்ள ஆசிரியரின் வீட்டில் தங்க நகைகள், பணம் என்பன திருட்டு போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணவன், மனைவி இருவரும் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் இவர்களின் வீட்டில், சில தினங்களுக்கு முன்னர், சங்கிலி, தோடு, பணம் என்பன திருட்டுப்போயுள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவ்வீட்டில் பணியாற்றிய சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, திருடப்பட்ட நகை, பணம் என்பன கண்டு பிடிக்கப்பட்டன.
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025