2025 மே 09, வெள்ளிக்கிழமை

’இதுவரை 5,842 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது’

Niroshini   / 2021 ஜூலை 08 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று (08) வரை, 5,842 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

சுகாதார பணியாளர்கள், ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  இதில் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் என 5,011 பேருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் 831 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதில், சுகாதார பணியாளர்கள் 781 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X