2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை நிர்வாக சேவைக்கு சத்தியஜீவிதா தெரிவு

Niroshini   / 2021 ஜூலை 18 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயனைச் சேர்ந்த சத்தியஜீவிதா ஜெயசேகரம் என்பவர், இலங்கை நிர்வாக சேவையின் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், அக்கராயன் மகா வித்தியாலத்தில் ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வியையும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் உயிரியல் பிரிவிலும் கல்வி கற்றார்.  வயம்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார்.

ஏற்கெனவே அக்கராயன் பிரதேசத்தில் நாகலிங்கம் நந்தகுமார் இலங்கை நிர்வாக சேவையில் சித்தியடைந்து, துணுக்காய் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, 2008ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், அக்கராயனுக்கும் துணுக்காய்க்கும் இடையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

இவருக்கு பின்னர் அக்கராயனில் இருந்து இலங்கை நிர்வாக சேவையில் சத்தியஜீவிதா ஜெயசேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .