2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலர் உணவு பொதிகள் வழங்கல்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - குரவில் பகுதியில் உள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 40 பேருக்கு, இன்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

முல்லை ஸ்டார் இசை சங்கமத்தின் ஏற்பாட்டில், ஜேர்மனி கேர்னெ ஒன்றியம், அகரம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, ஸ்ரீ சபாரத்தினம் அறக்கட்டளை ஆகியோரின் நிதி உதவியுடன் இந்த உலர் உணவு பொதி வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குகனேசன், ஸ்ரீசபாரத்தினம் அறக்கட்டளை தலைவரும்  ஓய்வுபெற்ற உபதபால் அதிபருமான க.கணேசகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது முல்லை ஸ்டார் கலைஞர்களின் வளர்ச்சிக்காக, ஸ்ரீ சபாரத்தினம் அறக்கட்டளையினரால்  நிதி உதவியும் வழங்கவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .