2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் இளைஞன் கைது

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் பகுதிக்கு கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞன், ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 1 கிலோகிராம் கஞ்சா, கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் வந்த மோட்டார் சைக்கிளை, ஏ-9 நெடுஞ்சாலையில் வைத்து மறித்து பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது, 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான 1கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியினை சேர்ந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .