Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அண்மைய நாட்களில் மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதுடன் கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளை கரையில் இருந்து காணக்கூடியதாகவும் உள்ளது.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடு தொடர்பில் கடற்படையினர் மற்றும் பொலிஸார்,கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் இன்று காலை திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் கட்டளைக்கு அமைவாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதன்போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகு ஒன்றினையும் அதில் இருந்த 9 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. (R)
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago