2025 மே 09, வெள்ளிக்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் படுகாயம்

Niroshini   / 2021 ஜூலை 12 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில், இன்று (12),  கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதபிள்ளை கிருஷ்ணகுமார் (வயது 35) என்பவரே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர், தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X