Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்துள்ளமையால், குறித்த வான்நீர் கடந்து செல்லும் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் தாழ் நிலங்களில் தேங்கியுள்ளுத. அதிக மழை காரணமாக மாவட்டத்தில் பல குளங்கள் நிறைந்து வருகின்றன.
கனகாம்பிகைகுளம் வான்பாய ஆரம்பித்துள்ளமையால், குறித்த வான் நீர் கடந்து செல்லும் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தின் திருத்தப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பாலத்துக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக வீதி அரித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மழை காரணமாக 3ஆம் தவணை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் அதேவேளை, இருளுடனான காலநிலை காரணமாக பரீட்சை மண்டபங்கயுக்கு மேலதிக ஒளியூட்டும் பணிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago