Editorial / 2022 ஒக்டோபர் 30 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர், கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) காலை, கயிறு இழுத்த வேளை கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். அவரை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
காணாமற்போன மீனவரின் சடலம், கொக்குளாய் கடற்கரையில் இன்று (30) காலை கரைஒதுங்கியுள்ளது.
உடலத்தினை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என அறியமுடிகின்றது.
15 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago