2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிபீர் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி

சண்முகம் தவசீலன்   / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 1999.09.15 அன்று இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் பகுதியில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.

வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், உயிரிழந்த உறவுகளின் உறவினர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .