Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள 65 பாடசாலைகளில் 15 பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக, வலயக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.
இதேபோன்று, துணுக்காய் கல்வி வலயத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 20 பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக, வலயக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு குடிநீர் விநியோகப்படுகின்றன. இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீரின் தன்மை தொடர்பாக அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago