2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுவனிடமிருந்து சூட்சுமமாக சைக்கிள் திருட்டு

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாஸ்கரன்

முல்லைத்தீவு - திருமுறி கண்டி பகுதியில் சிறுவனை வழிமறித்த நபர் ஒருவர், அவரது துவிச்சக்கர வண்டியை அவசர தேவைக்கு வாங்குவது போல் வாங்கிச் சென்று களவாடியுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பெற்றோல் இல்லாது நின்று விட்டதாகவும் ஆலயத்திற்கு அருகில் சென்று பெற்றோல் வாங்கி வருவதாகவும் தெரிவித்து, சிறுவனின்  துச்சக்கர வண்டியை வாங்கி  சென்றுள்ளார் .

நீண்ட நேரமாகியும் சென்றவர் மீண்டும் வராததால் 3 மணி நேரத்துக்கு மேல் வீதியில் காத்திருந்த சிறுவன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .