2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிலாவத்தையில் வாள்வெட்டு; ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் இருவருக்கிடையில் நேற்றிரவு (04) இடம்பெற்ற மோதலின் போது, குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து விரைந்த முல்லைத்தீவு பொலிஸார், சம்பவத்தின் போது வாள்வெட்டை மேற்கொண்டதாக முறையிடப்பட்ட நபரை, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .