2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன.

வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று (03) முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த ஆலயவளாகப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கங்களுடன் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் நடைபெற்ற ஆலய வளாகப் பகுதி ஒன்றிலேயே இவ்வாறான தகடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .