Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால், “நாட்டுக்காக நாம் ஒன்றாய்” எனும் தொனிப்பொருளில், கிளிநொச்சி - பரந்தன் சந்தியில், இன்று (09) முற்பகல் 10 மணியளவில், தேசிய விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இங்கு கருத்துரைத்த அந்த அமைப்பின் உறுப்பினர் ஜெனி, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலில் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, நாடு முழுவதும் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
இவ்வாறு அனைத்து மாவட்டங்களிலும், இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் கூறினார்.
23 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago