2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நாயாத்து வழிப் பகுதியிலும் திருச்சொரூபம் உடைப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழிப் பகுதியில், வீதிக்கு அருகாமையில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம், இனம் தெரியாத நபர்களால், இன்று (14) அதிகாலை உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ, அடம்பன் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட, அடம்பன் பொலிஸ் பகுதியில் உள்ள நாயாற்று வழி பிரதான வீதிக்கு அருகில் சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த, சுமார் மூன்று அடி உயரம் கொண்ட புனித அந்தோனியர் திருச்சொரூபமே இவ்வாறு உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த விஷமிகள், கண்ணாடிப் பெட்டியை உடைத்து, உள்ளே இருந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தை வெளியில் எடுத்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அடம்பன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார், உடைத்துச் சேதமாக்கப்பட்ட அந்தோனியார் சொரூபத்தை பார்வையிட்டதோடு, மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .