2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான கருத்தரங்கு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மற்றும் கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான கருத்தரங்கு, இன்று சனிக்கிழமை (10) நடைபெற்றது.

காலை 10 மணியளவில் ஆரம்பமான இக்கருத்தரங்கில் விபத்துகளை எவ்வாறு தடுப்பது, விபத்துகளைத் தடுப்பதில் பொலிஸாரின் பங்கு என்ன மற்றும் மக்களின் பங்கு என்ன என்பது தொடர்பான கலந்துரையாடல்  இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் கிளிநொச்சி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, கிளிநொச்சி பொலிஸ் போக்குவரத்துப் பொலிஸ்பிரிவு  பொறுப்பதிகாரி, பாதசாரிகள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் மோட்டார் வண்டிச் சாரதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .