Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 14 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் வைகாசி விசாகப் பொங்கல் நிகழ்வுக்கான தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு, நேற்று (13) மாலை படையினர், பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
இதன்போது, கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டது.
அத்துடன், தீர்த்தக்குடம் செல்லும் வழியிலும் மக்கள் கூடும் கோவில்களிலும், பொலிஸாரும் படையினரும், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மே 19ஆம் திகதியன்று, முள்ளியவளை காட்டுவினாயகர் கோவிலில் பொங்கல் நிகழ்வு நடைபெற்று, மறுநாள் 20ஆம் திகதி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பொங்கல் விழா நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
46 minute ago
2 hours ago