Editorial / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சதொச வளாகத்தில், இனிவரும் நாள்களில் புதிதாக அடையாளப்படுத்தப்படும் மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் குறித்து தகவல் வழங்க முடியாதென, விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இனிவரும் நாள்களில் புதிதாக அடையாளப்படுத்தப்படும் மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் சம்பந்தமாக தகவல் வழங்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்த அவர், இனிவரும் நாள்களில் ஊடகவியளார்கள் மனித புதைக்குழிக்கு வருகைத் தந்து, புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவுகளை மோற்கொள்ளலாமெனவும் கூறினார்.
ஆனால், இது குறித்து தகவல் வழங்குவது குறித்து எதுவும் கூற முடியாத நிலை காணப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சதொச வளாகத்தில், இன்று (21), 54ஆவது தடவையாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய, இதுவரை 72 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அற்றில் 66 மனித எச்சங்கள் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட எச்சங்கள் 440 பைகளில், இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்றப் பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளது
50 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago