Editorial / 2022 ஜனவரி 26 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தின் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரும் வளமான இரணைமடு குளத்துக்கு ஆபத்து ஏற்படுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்ட அரச அதிபர் தலைமையில், மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று முன்தினம் (24) பிற்பகல் நடைபெற்றது.
இதில் கருத்துரையாற்றிற அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரிகளாகிய நாங்கள் சில வருடங்களே இங்கு கடமையில் இருப்போம். ஆனால், இங்குள்ள சமூகமும் மக்களும் இப்பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றார்கள்.
“சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். குறிப்பாக, இரணைமடு குளத்தின் கீழ் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் பெரியதொரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது. இதனால் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும்.
“எனவே, சமூகத்தினுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக மிக அவசியமானது. அந்த அடிப்படையிலேயே, குறிப்பாக முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து அதன்மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
“அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன இடங்களை அடையாளப்படுத்தி, காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
25 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
5 hours ago
27 Jan 2026