2025 மே 15, வியாழக்கிழமை

மன்னாரில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 1 இலட்சம் வேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பாகவும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவது  தொடர்பாகவும் முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடலொன்று, நேற்று (10) காலை 11 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில், மாவட்ட  மேலதிகச் செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில்  நடைபெற்றது.

இதன்போது, 1 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின் மேற்பார்வை குழுவின் அங்கத்தவர்களும் அதற்கான பொறுப்பு அதிகாரி மெஜர் மொகான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அதன் அடிப்படையில், 1 இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்படவுள்ள 1,830 பேருக்கான பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கான மேலதிக தகமைகளை வலுப்படுத்தல் தொடர்பாக, வருகை தந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .