2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்னார் IOCக்கு முன்னால் குவிந்த மக்கள்

Freelancer   / 2022 ஜூன் 30 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலக பணியாளர்களின் மேற்பார்வையில்  இன்று காலை பெற்றோல் வழங்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளுக்கு 1,500 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபா விற்கும்,கார் உட்பட ஏனைய பெற்றோல் வாகனங்களுக்கு 2,500 ரூபாவிற்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .