2025 ஜூன் 04, புதன்கிழமை

மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற வளாகத்தில், பொலிஸார் இலஞ்சம் பெறுவதாகத் தெரிவித்து, மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர், நேற்று (03) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் நீதிமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழேயே, குறித்த முதியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

அத்துடன், முதியவாரால் குற்றஞ்சாட்டப்பட்ட கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , வடமாகாண சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவினால் எவ்வித விசாரணைகளும் இன்றி, இன்று (04) காலை நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .