Niroshini / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில், செவ்வாய்க்கிழமை (26) மாலை, 14 வயது சிறுவன் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தேராங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், தரம் 9இல் கல்வி பயின்ற சசிக்குமார் ஆதவன் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த சிறுவன், தேராங்கண்டல் குளப் பகுதியில், நபர் ஒருவருடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சிறுவனுடன் இருந்த நபர், சிறு காயங்களுக்கு உள்ளானார்.
47 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago