2025 மே 05, திங்கட்கிழமை

வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜூன் 02 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விசுவமடு, குமாரசாமிபுரம் பகுதியில், இன்று, தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டுக் கிணற்றிலிருந்தே, அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேலாயுதம் பரமேஸ்வரி (வயது 74) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தருமபுரம்  பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X