Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில், வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கித் தருமாறு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அனுப்பி வைத்துள்ள கடித்தத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அமைச்சர், வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தால், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில், மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளும் உள்ளடங்குவதாகவும் இதுவரை, இந்த வைத்தியசாலைகள் அபிவிருத்திச் செய்யப்படாததால், இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற நோயாளர்கள், இறப்பைச் சந்திக்க நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் பீடித்த டெங்குக் காய்ச்சல் காரமாணமாக, அந்தப் பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் வைத்தியசாலையில், போதிய மருத்துவ வசதிகள் இன்மையால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அக்கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில், அண்மைக் காலத்தில் வலிந்து திணிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள், இந்த மக்களை அடிக்கடி உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாக, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
05 Jun 2025