2025 ஜூன் 11, புதன்கிழமை

ஆழ்ந்த நித்திரையால் அதிகரிக்கும் நினைவாற்றல்

Kanagaraj   / 2014 ஜூன் 10 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆழ்ந்த நித்திரை உடல் நலத்துக்கு சிறந்தது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆழ்ந்த நித்திரையினால் நினைவாற்றல் மற்றும் கற்றல் ஆற்றல்கள் அதிகரிப்பதாக அண்மைய ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

ஆழ்ந்த நித்திரை தொடர்பாக எலிகளிடம்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஆழ்ந்து தூங்கிய எலிகள் பயிற்சிகளை மிக எளிதாக கற்றுக் கொண்டுள்ளன.

இதனடிப்படையில் ஆழ்ந்து தூங்கும் மனிதர்களின் நினைவற்றலும், கல்வி அறிவும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆழ்ந்த தூக்கம் காரணமாக நியூரோன்களுக்கு இடையில் புதிய இணைப்பு ஏற்பட்டு அதன் மூலம் நினைவாற்றல் தூண்டப்படுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்றாக உறங்குவதன் ஊடாக நினைவாற்றல்களை அதிகரித்து கொள்ள முடியும்.

ஆழ்ந்த நித்திரைக்கு நீங்க தயாரா?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10